Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்து சமய அறநிலையத்துறைக்கு 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு

Advertiesment
sekar babu

Mahendran

, ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (10:03 IST)
இந்து சமய அறநிலையத்துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானத்தை ஈட்டிக்கொடுத்தது திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 
திருக்கோவிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை டெபாசிட் செய்யும் திட்டம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர் பாபு ’திருக்கோயிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தை எவ்வளவு பேர் எதிர்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
 
ஆனால், இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மூன்றரை ஆண்டில், இத்திட்டம் மூலம் திருக்கோயில்களுக்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியவர்கள் கூட, தற்போது பாராட்டி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60.. இன்று கவுண்ட் டவுன் தொடக்கம்..!