Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு... 20 பேர் தலைமறைவு ...

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு... 20 பேர் தலைமறைவு ...
, திங்கள், 3 பிப்ரவரி 2020 (19:04 IST)
குரூப் 2 ஏ தேர்வு

குரூப் 1 தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என டிஎன்பிஎஸ்சி வாரியம் தெரிவித்துள்ளது. அதேசமயம் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால் காவல் துறையிடம் புகார் அளித்து, உரிய ஆவணங்களை ஒப்படைத்துள்ளது டிஎன்பிஎஸ்சி.
 
சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4  தேர்வில் முறைகேடு நடந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருந்க்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக சிபிசிஐடி -டிஜிபி ஜாபர் சேட் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
இந்த விசாணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தமிழக சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், குரூப் 2 ஏ முறைகேடு விவகாரம் குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் அளித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி. 
 
இதனையடுத்து,  குரூப் 2 ஏ தேர்வு மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில், முக்கிய நபரான இடைத்தரகர் ஜெயக்குமார், முதல்நிலை காவலர் சித்தாண்டி தலைமறைவாக உள்ள நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர்.
 
மேலும் , இந்த விவகாரத்தில் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது. அந்த எண்களின் மூலம் அவர்கள் யார் யாரிடம் தொடர்பு கொண்டனர் என்ற விவரங்களை சிபிசிஐடி போலீஸார் சேகரித்துள்ளனர். 
 
சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் குரூப் 4 தேர்வு எழுதிய 10 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை எழும்பூரில் சிபிசிஐடி போலீஸார் அலுவலகத்தில் வைத்து 10 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை; விஜயபாஸ்கர் உறுதி