Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் நோயாளிகள் பீதி…

அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் நோயாளிகள் பீதி…
, சனி, 8 டிசம்பர் 2018 (13:35 IST)
கும்பகோனம் அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் பதட்டமடைந்துள்ளனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் பரப்ரப்பை உண்டாக்கியுள்ளது. உள்நோயாளிகள் பிரிவான அந்த வார்டில் 7 பேர் உள்நோயாளிகளாக தங்கி இருந்துள்ளனர். அவர்களுடன் அவர்களது உறவினர்களும் தங்கி இருந்துள்ளனர்.

திடிரென காரைகள் கீழே விழுந்தவுடன் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் பதற்றத்தில் அந்த வார்டை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தனர். இதனால் அருகில் உள்ள வார்டுகளிலும் பதட்டமான சூழ்நிலை உருவானது.

சிறிது நேரத்திற்குப் பின் காரைகள் சுத்தம் செய்யப்பட்ட பின் நோயாளிகள் மீண்டும் வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது பேருந்து : பலி எண்ணிக்கை உயர்வு