Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை.. கோவில் உண்டியலும் காலி! – விராலிமலையில் மர்ம கும்பல்!

theft
, திங்கள், 23 அக்டோபர் 2023 (09:43 IST)
விராலிமலையில் ஒரே நாள் இரவில் கடைகள், கோவிலில் மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் பிரதான சாலைகளில் உள்ள கடைகள் சில பூட்டு உடைக்கப்பட்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எலெக்ட்ரானிக் கடைகள், கணினி கடைகள் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமான மடிக்கணினி, மின்னனு சாதனங்கள் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முருகன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையும் அந்த மர்ம கும்பலே செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒருநாள் இரவில் 8 கடைகள், ஒரு கோவில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களிடம் தவறாக நடந்து கொண்டால் தூக்கு தண்டனை! – முதல்வர் அறிவிப்பு!