Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதியில் கோயில் பேருந்தை திருடிய நபர் கைது

Tirupathi bus
, செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:23 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கோயில் பேருந்தை திருடிய நபரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திருப்பதியில் உலகப் புகழ்பெற்ற ஏழுமலை வெங்கடாசபலதி திருக்கோயில் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த  சில நாட்களுக்கு முன்பு, ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.4 கோடி மதிப்பிலான மின்சாரப் பேருந்தை ஒரு நபர் திருடிச் சென்றார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த  நிலையில்,  மின்சாரப் பேருந்தை திருடிச் சென்றபோது, ப பேட்டரி தீர்ந்ததால் பாதியில் நிறுத்தித் தப்பிச் சென்ர திருடன் விஷ்ணுவை(20) இன்று போலீஸார் கைது செய்தனர். பேருந்தின் உதிரி பாகங்களை தனித்தனியாக பிரித்து அதை சென்னையில் விற்க  முயன்றதாக போலீஸில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் தடம்புரண்டு விபத்து....