ஆர்.கே.நகர் எங்கே இருக்குதுன்னு கமலுக்கு தெரியுமா? பொதுமக்கள் கொதிப்பு

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (22:44 IST)
சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்து நடிகர் கமல்ஹாசன் பத்திரிகை ஒன்றில் எழுதியபோது, இன்று 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலைபோயுள்ளீர்கள். இது பிச்சை எடுப்பது போன்ற கேவலம். அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா? என்று ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற தினகரனையும், அவருக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த பொதுமக்களையும் கடுமையாக சாடியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ஏற்கனவே டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ள நிலையில் தற்போது ஆர்.கே.நகர் பொதுமக்களும் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி எங்கே இருக்குதுன்னு கமலுக்கு தெரியுமா? இந்த தொகுதியின் பிரச்சனைகள் என்ன என்றே தெரியாத ஒருவர் கமல் என்றும், நாங்கள் காசு வாங்கியதை கமல் பார்த்தாரா? யாரோ சொல்வதை வைத்து கமல் கூறியது கண்டிக்கத்தக்கது என்றும், கமல் தன்னுடைய கருத்தை வாபஸ் பெற்று ஆர்கே நகர் தொகுதி மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கொதிப்புடன் கூறியுள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments