Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சரின் அறிவிப்புக்கு பின்னரும் தொடரும் வேலைநிறுத்தம்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (22:32 IST)
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த ஊதிய உயர்வை ஒருசில போக்குவரத்து சங்கங்கள் ஏற்றுக்கொள்ளாமல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பாதிவழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பான ஊதிய உயர்வை அரசு வழங்கியுள்ளதாகவும், இந்த ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அரசு மற்றும் பொதுமக்களுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணி செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments