Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காந்தியடிகளின் பிறந்தநாளில் மதுவை ஒழிக்க தீர்மானம்! கிராமசபை கூட்டங்களுக்கு அன்புமணி வேண்டுகோள்!

Advertiesment
Grama sabha meetings

Prasanth K

, செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (11:19 IST)

காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் மதுவை ஒழிக்க தீர்மானம் நிறைவேற்றும்படி அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-ஆம் பிறந்தநாளையொட்டி  நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் நாள்  உள்ளாட்சி அமைப்புகளில்  கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள் ஆகும்.  அவற்றில்  எடுக்கப்படும் முடிவுகளை உச்சநீதிமன்றம் கூட மதிக்கும்  என்பதால்,  அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களை தவறாமல்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சினை மது மற்றும் போதை ஒழிப்பு தான். ஒருபுறம் தெருத்தெருவாக மதுக்கடைகளைத்  திறந்து இளைஞர்களையும், மாணவர்களையும் அரசே குடிகாரர்களாக்கி வரும் நிலையில், இன்னொருபுறம் ஆளுங்கட்சியின்  ஆசிகளுடன்  செயல்படும் போதை வணிகர்கள் கிராமங்கள் வரை கஞ்சா, அபின், கோகெயின், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை கொண்டு வந்துவிட்டனர்.

 

மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும்,  இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு  நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலில் மன்மோகன்சிங்கை தோற்கடித்த பாஜக பிரபலம் காலமானார்.. அஞ்சலி செலுத்தும் தலைவர்கள்..!