Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

Advertiesment
நீலகிரி

Siva

, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (08:10 IST)
நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இன்று (ஆகஸ்ட் 5) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சிவப்பு எச்சரிக்கையை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் தங்கள் பயண திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
கனமழையால் ஏதேனும் இயற்கை பேரிடர் ஏற்பட்டால், பொதுமக்கள் உடனடியாக தொடர்புகொள்ளக் கட்டணமில்லா தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
 
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077
 
வாட்ஸ்அப் எண்: 9488700588
 
பிற எண்கள்: 0423 2450034, 0423 2450035
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 கன்னியாஸ்திரிகள் கைதுக்கு கிறிஸ்துவர்களின் ரியாக்சன்.. இந்துக்களிடம் இந்த ஒற்றுமை ஏன் இல்லை? இந்து தலைவர் கருத்து!