Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதவியேற்க முடியாது? ஓவர் பில்டப் கொடுக்கும் ஓபிஎஸ் மகன்!

பதவியேற்க முடியாது? ஓவர் பில்டப் கொடுக்கும் ஓபிஎஸ் மகன்!
, செவ்வாய், 11 ஜூன் 2019 (12:11 IST)
தேனி தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டுதான் பதவியேற்பேன், அதுவரை பதவியேற்க மாட்டேன் என ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளாராம். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். தேனி தொகுதியில் வெற்றி பெற்ற இவருக்கு அமைச்சர் பதவி வாங்க ஓபிஎஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் வீணானது. 
 
இந்நிலையில் ரவீந்திரநாத் தனக்கு வாக்களித்த தேனி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அப்போது சோழவந்தான் பகுதியில் நன்றி தெரிவித்த போது பின்வருமாரு பேசினார், நான் முதல் முதலில் சோழவந்தான் பகுதியில் இருந்துதான் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினேன். 
webdunia
மேலும், எனக்கு வாக்களித்த தேனி தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பின்னர்தான் எம்பி-யாக பதவியேற்பேன் என்பதில் உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். அதோடு, கடைசியாக மக்களின் அடிப்படை தேவை மற்றும் தொகுதி பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவே என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உருவானது ’வாயு’ புயல்: தமிழகம், கேரளா, கர்நாடகத்திற்கு மழை!