ஏடிஎம் கொள்ளையனாக மாறிய என்ஜினீயர்! – ராமநாதபுரத்தில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (09:24 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிநகர் பகுதியில் எஞ்ஜினீயர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றை மர்ம நபர் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஏடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை போலீஸார் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக திரிந்த நபர் ஒருவரை விசாரிக்க அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தீவிர விசாரணையில் அவர்தான் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றவர் என தெரிய வந்துள்ளது.

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்த சிவசந்திரன் என்னும் அந்த நபர் மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா காரணமாக வேலையிழந்த அவர் வேலை கிடைக்காமல் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments