Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார் இன்னைக்காவது லீவு குடுங்க..! – மறுபடியும் விருதுநகர் ஆட்சியரிடம் மன்றாடிய விஜய் ரசிகர்!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (08:58 IST)
தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் விருதுநகரில் லீவு கேட்ட விஜய் ரசிகருக்கு மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள பதில் வைரலாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் 29 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்ட விஜய் ரசிகர் ஒருவர் “விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் நலன் கருதி (18.11.21) விடுமுறை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியை டேக் செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆட்சியர் “விடுமுறை கிடையாது. இரவில்தான் மழை பெய்கிறது. பகலில் வெயில் வீசுகிறது” எனக் கூறியுள்ளார். இதுபோல் முன்னதாக விஜய் ரசிகர் ஒருவர் விடுமுறை குறித்து கேள்வி எழுப்பியபோது பள்ளிக்கு போக சொல்லி ஆட்சியர் மேகநாத் ரெட்டி கூறியது வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments