Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலின் உரையில் வரவேற்பும் ஏமாற்றமும் இருக்கிறது… ராமதாஸ் கருத்து!

ஸ்டாலின் உரையில் வரவேற்பும் ஏமாற்றமும் இருக்கிறது… ராமதாஸ் கருத்து!
, திங்கள், 21 ஜூன் 2021 (15:55 IST)

இன்று சட்டமன்றத்தில் ஸ்டாலின் உரையாற்றிய போது வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராமதாஸின் அறிக்கை:-

தமிழ்நாட்டில் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான தெளிவான செயல்திட்டம் இல்லாததும், சமூக நீதி சார்ந்த வாக்குறுதிகள் இல்லாததும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கிவைத்து உரையாற்றினார். தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சிக்காகத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 13 ஆண்டுகளாக பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக்குழு அமைக்கப்படும். தமிழக அரசின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்பவை உள்ளிட்ட தமிழக அரசின் அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவையே. தமிழகத்தின் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்திருப்பது நீட் தேர்வு ஆகும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெருவதற்கான சட்டங்களை நிறைவேற்றி அவற்றுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு இதுதான் இயல்பான நடைமுறை என்றாலும் கூட, கடந்த ஆட்சியில் இதேபோன்று நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.

இத்தகைய சூழலில் புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதை உறுதி செய்ய எத்தகைய அணுகுமுறையைத் தமிழக அரசு கடைப்பிடிக்கப் போகிறது என்பது குறித்த செயல்திட்டம் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்கள் விரைவாக நிறைவேற்றப்படும்; 2 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள தொழில்நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் 75% தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே வழங்க வகை செய்யும் சட்டத்தை இயற்றுவது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. கரோனா தொற்று ஓய்ந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும். 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருப்பதும்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிகள் திறக்கப்படுமா?