Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 11 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

Prasanth Karthick
வெள்ளி, 30 மே 2025 (08:56 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியுள்ள நிலையில் அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னதாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டு தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தமிழகத்தில் மழை வாய்ப்பு அதிகரித்தது.

 

இந்நிலையில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments