Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரையை கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Advertiesment
ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம்

Mahendran

, வியாழன், 29 மே 2025 (16:48 IST)
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், இன்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றின் கடற்கரை பகுதிகளை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த செவ்வாய் அன்று வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் இந்த மண்டலம் உருவானது. தொடக்கத்தில் இது குறைந்த அழுத்தமான நிலையில் இருந்தாலும், சில மணி நேரங்களுக்குள் நிலைமை தீவிரமடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருவெடுத்தது.
 
மேலும் இது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, இந்திய, வங்கதேசம் ஆகிய இரு நாடுகளின் எல்லையை கடந்து கரையை தீவிரமாக தாக்கியது. இது தற்போது படிப்படியாக வலுவிழந்து, மீண்டும் ஒரு சாதாரண தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலைத் துறை முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.
 
கடற்கரை பகுதிகளில் மிதமான கனமழையும், சுழற்சி காற்றும் பதிவாகியுள்ளது. மீனவர்கள் மற்றும் கடலோர வாசிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திறந்த நாளிலேயே விரிசல் விழுந்த பாலம்.. 320 கோடி ஊழல்..? - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!