Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை: இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என தகவல்..!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை: இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என தகவல்..!
, செவ்வாய், 11 ஜூலை 2023 (09:16 IST)
நேற்று இரவு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்திருப்பதை அடுத்து இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இன்று காலை முதல் சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பதும் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று இரவு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தடுத்தது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 53 மில்லி மீட்டர் மழையும் கடலூரில் 49 மில்லி மீட்டர் மழையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதேபோல் புதுச்சேரியில் 43 மில்லி மீட்டர், மதுரையில் 34 மில்லி மீட்டர், கொடைக்கானலில் 29 மில்லி மீட்டர், திருச்சியில் 24 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறப்பட்டிருப்பது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம் எழுதி இருப்பது முழுவதும் கற்பனை: வானதி சீனிவாசன்