இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	ஜூலை 10 முதல் 15 வரை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது 
	 
	இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. 
	 
	சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையின் பல பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
	 
	மேற்கண்ட 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.