Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலை 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Advertiesment
Chennai Rain
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைதளத்தில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி?