Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்.. ஞாயிறு அன்று வெளியே போக வேண்டாம்..!

Advertiesment
Tamil Nadu

Siva

, ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2025 (08:33 IST)
தமிழகத்தில் இன்று காலை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும்.
 
இன்று மழைக்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
 
விழுப்புரம், நீலகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த தகவலின் அடிப்படையில், பொதுமக்கள் தங்கள் பயணங்களை திட்டமிட்டுக்கொள்ளுமாறும், பெரும்பாலும் ஞாயிறு விடுமுறையில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கனமழை: பக்தர்கள் கடும் அவதி