Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தலைமையில் இணையும் சிறு கட்சிகள்??! – அரசியல் எண்ட்ரிக்கு அஸ்திவாரமா?

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (13:45 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை புதிய நீதி கட்சி தலைவர் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் இன்னமும் கட்சி குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறார்.

இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கினால் அவருக்கு ஆதரவளிக்க தமிழகத்தில் உள்ள தொடக்கநிலை கட்சிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று ரஜினியை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். இது எதுபற்றிய பேச்சுவார்த்தை என்பது தெளிவுப்பட தெரியவில்லை என்றாலும், ரஜினியின் அரசியல் நகர்வு குறித்ததாக இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments