Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய ரிசர்வ வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று !

இந்திய ரிசர்வ வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று !
, திங்கள், 26 அக்டோபர் 2020 (13:04 IST)
இந்திய ரிசர்வ வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரெ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரொனா வைரஸ் தொற்றால்  உலகமெங்கிலும் சுமார் 4 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 80 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் லேசாகக் குறையத் தொடங்கிய கொரோனா வைரஸ் தன் வேலையை மீண்டும் காட்டத்தொடங்கி வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனா இறப்பு விகிதம் குறைந்துவருகிறது. தமிழகத்தில் 3ஆயிரத்துக்கும் குறைவான கொரொனா பாதிப்புகளே நேற்றுப் பதிவானது.

இந்நிலையில், இந்திய ரிசர்வ வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ,  நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன்…ஆனால் எந்த அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு பணிகளில் ஈடுபட்டுவருகிறேன்  எனத்தெரிவித்துள்ளார் . #sakthikanthadas #tamilnews #reservebankgoverner #corono

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய நபர்....வாகனங்கள் சேதம் ...பரபரப்பு சம்பவம்