Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 31 வரை புதுவையில் ஊரடங்கு நீட்டிப்பு!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (16:11 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் ஆகஸ்ட் 31 வரை ஈரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
தமிழகத்தை போலவே புதுவையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில வாரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது 
 
அதுமட்டுமின்றி ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments