Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!
, வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (18:41 IST)
தமிழகத்தில் 9,10,11 மற்றும்12 ஆம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50%விழுக்காடு மாணவர்களுடன் கொரொனா தொற்றுக் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவெடித்துள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில் கர்நாடகாவில் 8-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் வரும் 23 ஆம் தேதி திறக்கப்படுவதாகவும், ஒருநாள் விட்டு வகுப்புகள் நடைபெறும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

இநிந்லையில் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும்12 ஆம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50%விழுக்காடு மாணவர்களுடன் கொரொனா தொற்றுக் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குரிய நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு