Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய வந்த போலீசார்: கைதாக மறுப்பதால் பரபரப்பு

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய வந்த போலீசார்: கைதாக மறுப்பதால் பரபரப்பு
, வியாழன், 19 மார்ச் 2020 (09:09 IST)
மதிமுக, அதிமுக, அமமுக, திமுக என தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்திலும் இணைந்து சேவை செய்து வந்த பழம்பெரும் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், இப்போதைக்கு திமுகவில் உள்ளார். அவர் அதிமுக, ரஜினி உள்பட அனைத்து கட்சிகளையும் கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அந்த தேர்தல் பிரசாரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி போலீசார் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்த நிலையில் தற்போது நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாகர்கோவில் அருகே உள்ள இல்லத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுவை போலீசார் முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் நாஞ்சில் சம்பத் கைதாக மறுப்பதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே விலையில் தொடரும் பெட்ரோல், டீசல்!