Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3வது முறையாக நில அதிர்வு - பீதியில் மக்கள்!!

3வது முறையாக நில அதிர்வு - பீதியில் மக்கள்!!
, சனி, 25 டிசம்பர் 2021 (15:54 IST)
வேலூர் மாவட்டத்தில் 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  

 
தமிழகத்தில் அவ்வப்போது திடீர் திடீரென நிலநடுக்கம் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் காலை ஒன்பது முப்பது மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
 
இதனை அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் அதே பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை பேரணாம்பட்டு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதே பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  வேலூர் நில அதிர்வு குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நில அதிர்வுக்கான காரணம் குறித்து புவியியல் நிபுணர்களை வைத்து கண்டறியுமாறு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமைக்ரான்: 91% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு!!