Publish Date: Thu, 23 Dec 2021 (17:34 IST)
Updated Date: Thu, 23 Dec 2021 (17:37 IST)
வேலூரில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் பதட்டத்துடன் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலூரில் இன்று பிற்பகல் 3.11 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக நில அதிர்வு பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த நில அதிர்வு காரணமாக பெரிய சேதங்கள் எதுவும் இல்லை என்று தகவல் வெளிவந்தாலும் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்திலும் பதட்டத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது
வேலூரில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக லேசாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.