Publish Date: Fri, 31 Dec 2021 (08:08 IST)
Updated Date: Fri, 31 Dec 2021 (08:24 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒருசில பொருட்களுக்கான வரி குறைப்பு, ஜவுளிக்கான வரி உயர்வு ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் வீட்டார் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது