Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனமழை எதிரொலி: சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டது!

கனமழை எதிரொலி: சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டது!
, வெள்ளி, 31 டிசம்பர் 2021 (08:01 IST)
கனமழை எதிரொலி: சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டது!
சென்னையில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக பல சாலைகள் மழைநீரில் தத்தளித்தது என்பதும் போக்குவரத்து இதனால் ஸ்தம்பித்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை நீர் தேங்கி கனமழை காரணமாக மழை நீர் தேங்கி உள்ளதால் சென்னையில் உள்ள நான்கு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
 
சென்னையில் உள்ள துரைசாமி துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை, ஆகிய நான்கு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!