Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி-ஐ குறைக்கவும் - ஓபிஎஸ் கடிதம்!

ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி-ஐ குறைக்கவும் - ஓபிஎஸ் கடிதம்!
, செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:52 IST)
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5% ஆக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக ஜவுளித்துறை மிகுந்த இன்னல்களை சந்தித்துள்ளது. இதனால் ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுதான் விலைவாசி உயர்வை குறைக்கும்.
 
ஊழியர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். விலை உயர்வு ஊழியர்களை மட்டும் பாதிக்காது. சிறு - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும். குடும்பங்களையும் பாதிக்கும். கொரோனா பரவல் காரணமாக அவர்கள் இழப்பை சந்தித்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி!