Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Advertiesment
மதுரை
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (13:37 IST)
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடப்பதால் முன்னால் அமைச்சர்களில் ஒருவரான செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி குறித்து பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ’மதுரை ஸ்மார்ட் சிட்டி உள்பட எந்த வளர்ச்சித் திட்டத்தில் தவறு நடக்கவில்லை என்றும் திட்ட பணிகளில் 75% நிதியமைச்சர் தொகுதிகள் தான் நடைபெறுகிறது என்றும் அதிமுகவின் திட்டங்களை கொச்சைப்படுத்தி நிதியமைச்சர் பேசுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார் 
 
இதற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிவது பெரிய வித்தை இல்லை என்றும் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதால் செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலும் கொரோனா அதிகரிக்கும்: சுகாதார செயலர் எச்சரிக்கை!