Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேலும் கொரோனா அதிகரிக்கும்: சுகாதார செயலர் எச்சரிக்கை!

மேலும் கொரோனா அதிகரிக்கும்: சுகாதார செயலர் எச்சரிக்கை!
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (13:29 IST)
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு 1700ஐ நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மக்கள் கொரோனா விதி முறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கையுடன் கூறியுள்ளார். 
 
மேலும் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா காலத்தில் மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்றும் தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் தினமும் 2000 கொரோனா வைரஸ் பாதிப்பு வரை சென்று அதன் பின் தான் இறங்கும் என்றும் அவர் கூறி உள்ளார் கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் இப்போது இருந்தே தொடர்ந்து கொரோனா வழி முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் பிறந்த நாள் அன்று ராகுல்காந்தியின் டுவிட்!