Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விலைவாசி உயர்வு: சிலிண்டருக்கு மாலை அணிவித்து விசிக போராட்டம்!

sylinder
, வெள்ளி, 27 மே 2022 (22:20 IST)
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே முத்தாலம்மன் பஜாரில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்.
 
மத்திய அரசின் சார்பில் நாளுக்கு அதிகரித்து வரும் விலைவாசி உயர்விற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்று மற்றும் நாளை மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து தேசம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
.இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ, சிபிஎம் , விசிக என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி....விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்