Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி, தோல்வி சகஜம்.. வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம்: பிரேமலதா

Mahendran
புதன், 5 ஜூன் 2024 (14:43 IST)
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும், தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம், கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 
தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க கடுமையாக உழைப்போம் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க பெரிய வெற்றியை பெற வேண்டும் என்றும், தே.மு.தி.கவுக்கு வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
பல சவால்களை எதிர்த்து, அசைக்க முடியாத சக்தியாக இந்த கூட்டணியை மாற்றிய தொண்டர்களுக்கு நன்றி என்றும் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.
 
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா மகன் விஜய பிரபாகரன் ஐயாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை எல்லாம் தோல்வி அடைந்தார் என்பதும் அவர் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பை அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இன்னும் கொஞ்சம் தீவிரமாக அவர் பிரச்சாரம் செய்திருந்தால் வெற்றிக் கனியை படுத்திருப்பார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments