Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி, தோல்வி சகஜம்.. வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம்: பிரேமலதா

Mahendran
புதன், 5 ஜூன் 2024 (14:43 IST)
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும், தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம், கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 
தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க கடுமையாக உழைப்போம் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க பெரிய வெற்றியை பெற வேண்டும் என்றும், தே.மு.தி.கவுக்கு வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
பல சவால்களை எதிர்த்து, அசைக்க முடியாத சக்தியாக இந்த கூட்டணியை மாற்றிய தொண்டர்களுக்கு நன்றி என்றும் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.
 
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா மகன் விஜய பிரபாகரன் ஐயாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை எல்லாம் தோல்வி அடைந்தார் என்பதும் அவர் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பை அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இன்னும் கொஞ்சம் தீவிரமாக அவர் பிரச்சாரம் செய்திருந்தால் வெற்றிக் கனியை படுத்திருப்பார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments