வெற்றி, தோல்வி சகஜம்.. வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம்: பிரேமலதா

Mahendran
புதன், 5 ஜூன் 2024 (14:43 IST)
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும், தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம், கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 
தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க கடுமையாக உழைப்போம் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க பெரிய வெற்றியை பெற வேண்டும் என்றும், தே.மு.தி.கவுக்கு வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
பல சவால்களை எதிர்த்து, அசைக்க முடியாத சக்தியாக இந்த கூட்டணியை மாற்றிய தொண்டர்களுக்கு நன்றி என்றும் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.
 
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா மகன் விஜய பிரபாகரன் ஐயாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை எல்லாம் தோல்வி அடைந்தார் என்பதும் அவர் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பை அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இன்னும் கொஞ்சம் தீவிரமாக அவர் பிரச்சாரம் செய்திருந்தால் வெற்றிக் கனியை படுத்திருப்பார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments