Publish Date: Fri, 29 Apr 2022 (19:41 IST)
Updated Date: Fri, 29 Apr 2022 (19:48 IST)
தமிழக மீனவர்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதை அடுத்து கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்பது ஒன்றே நிரந்தர தீர்வு என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை நாட்டிற்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அதுமுதல் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாட்டு மீனவர்களின் துயரங்களுக்கு இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பது மட்டுமே நிரந்தர தீர்வாகும் என்றும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் பொது மக்களுக்கு எதிராகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்