Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒருமையில் பேசிய பிரேமலதா: செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு

ஒருமையில் பேசிய பிரேமலதா: செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு
, வெள்ளி, 8 மார்ச் 2019 (13:37 IST)
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா ஒருமையில் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர். இதுகுறித்து துரைமுருகன் தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியதாகவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என கூறிவிட்டதாக சொன்னார்.
 
இதுகுறித்து விளக்கமளித்த தேமுதிக துணை செயளாளர் சுதீஷ், எங்களது கட்சி நிர்வாகிகள் துரைமுருகனிடம் சென்றது கூட்டணி குறித்து பேச அல்ல பர்ஸ்னல் விஷயமாக பேசச் சென்றனர் என்றும் துரைமுருகன் கூறுவது உண்மை இல்லை எனவும் கூறினார்.
 
தேமுதிக கூட்டணி குறித்து பேசியிருந்தாலும் கூட துரைமுருகன் இப்படி ஒப்பனாக பேசியது தேமுதிகவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இதுகுறித்தான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, செய்தியாளர்களை ஒருமையில் பேசினார். நீ எந்த சேனல். நீ ஏன் இப்படி கேள்வி கேட்கிறாய் என்றெல்லாம் பேசினார். மீடியாக்கள் அவசரத்திற்கெல்லாம் கூட்டணி அறிவிப்பை அவசரம் அவசரமாக வெளியிடமுடியாது என கூறினார். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துரைமுருகன் ஒரு மாதிரியான ஆள்: பிரேமலதா பொளேர்!!!