Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பிகளுக்கு ஆதரவா பிரேமலதா விஜயகாந்த்?

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (16:14 IST)
நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கூடாது, அப்படி செய்தால் அனைத்து கட்சிகளையும்தான் தடை செய்ய வேண்டும் என பிரேமலதா பேசியுள்ளார். 
 
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜிவ் காந்தி மரணம் குறித்து பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 
 
சீமானின் இந்த பேச்சு தமிழக அரசியல் சூழ்நிலையில் கடுமையான அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. சீமானைத் தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் அங்கிகாரததை நீக்க வேண்டும் எனவும் கோரியது. 
இது குறித்து தற்போது பிரேமலதா விஜயகாந்த பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ராஜீவ் காந்தி கொலை தொடர்பான சீமானின் பேச்சுகள் ஏற்றுக் கொள்ள முடியாது. அது தவறானது. 
 
கமல்ஹாசனும் கூட இதேபோல் தான் பேசி வருகிறார். ஆனால், இதற்காக சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கூடாது. அப்படி செய்தால் அனைத்து கட்சிகளையும்தான் தடை செய்ய வேண்டும் என கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments