Publish Date: Wed, 05 Feb 2020 (15:22 IST)
Updated Date: Wed, 05 Feb 2020 (15:35 IST)
பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் ஆலோசகராக நியமித்துள்ளார். இதற்கு சில நாட்களுக்கு முன் நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்தனர்.
தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :
திமுக, மக்களுடைய உணர்வுகளை எண்ணங்களை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறது. அதை பிரசாந்த் கிஷோர் தருவார் என்ற நம்பிக்கையில் அவரை நியமித்து இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய மக்களின் மனநிலையை பிரசாந்த் கிஷோர் புரிந்து கொள்ள முடிந்தாலும் கூட தமிழகத்தில் அதை செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.