Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

Advertiesment
இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
, புதன், 20 அக்டோபர் 2021 (20:42 IST)
இயக்குனர் ஷங்கரின் மருமகனும் பிரபல கிரிக்கெட் வீரருமான ரோஹித் தாமோதரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் ரோஹித் தாமோதரன் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. பயிற்சிக்கு வந்த 16 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக ரோஹித் தாமோதரன் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் ரோஹித் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளை கடந்த ஜூன் மாதம் ரோஹித் தாமோதரன் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருணாச்சல பிரதேச எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா!