Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா?

Advertiesment
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா?
, புதன், 20 அக்டோபர் 2021 (16:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி-20 கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாகச் செயல்படப்போவதில்லை என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தற்போது கேப்டனாக உள்ள கோலி எதிர்காலத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து விடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோலிக்கு மாற்றாக கேப்டனாக செயல்பட ரோஹித் சர்மா திறமையானவர் எனக் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி-20 உலகக் கோப்பை; ஸ்காட்லாந்து ஜெர்சியை வடிவமைத்த சிறுமி!