Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

Advertiesment
பூந்தமல்லி

Siva

, வெள்ளி, 6 ஜூன் 2025 (18:04 IST)
சென்னையில் நடைமுறையில் இருக்கும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி – போரூர் வழித்தடம் வரும் டிசம்பர் மாதத்தில் பயணத்திற்காகத் தயாராகும் என மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் அறிவித்துள்ளார்.
 
மொத்தம் 116 கிலோமீட்டர் நீளத்தில் மூன்று முக்கிய வழித்தடங்களாக 2-ஆம் கட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செல்லும் பாதை முக்கியமானதாகும். கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்க பாதையாகவும், பவா ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை மேம்பால பாதையாகவும் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
 
இதில், பூந்தமல்லி - போரூர் இடையே இருக்கும் பாதையில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த பகுதியில் டிசம்பரில் சேவை தொடங்க உள்ள நிலையில், சோதனை ஓட்டங்கள் கடந்த வாரங்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளன.
 
இன்று நடைபெற்ற மூன்றாவது சோதனை ஓட்டத்தில், பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீ. தூரம், மணிக்கு 20-25 கி.மீ. வேகத்தில் ஓட்டப்பட்டது. இந்த முறையில் டவுன் லைனில் ஓட்டம் நடைபெற்றது. ஒரு மாதத்துக்குள் முழு வேக சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது.
 
இதனையடுத்து, பூந்தமல்லி – போரூர் மெட்ரோ டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!