Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

Advertiesment
ராகுல் காந்தி

Siva

, வெள்ளி, 6 ஜூன் 2025 (17:59 IST)
பிரதமர் மோடி சரணடையும் வழக்கத்தை கொண்டவர் என்பதும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுவரை 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டதாக கூறியுள்ளார் என்றும், ஆனால் மோடி இதுவரை அது குறித்து வாய் திறக்கவில்லை என்றும், உண்மை என்பதால் தான் அவர் பேச மறுக்கிறார் என்றும் தெரிவித்தார்.
 
வெளிப்படையான, உண்மையான ஜாதி வாரி கணக்கெடுப்பை பாஜக அரசு எடுக்காது என்றும், ஏனெனில் அவ்வாறு செய்தால் அத்துடன் பாஜக கதை முடிந்துவிடும், அவர்களது அரசியல் முடிவுக்கு வந்துவிடும் என்றும் இன்னொரு கேள்விக்கு ராகுல் காந்தி கூறினார்.
 
அரசியலமைப்பை பாதுகாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருவதாக கூறிய ராகுல் காந்தி, "எதிர்காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 50% இட ஒதுக்கீட்டை நீக்கிவிடுவோம், புதிய இட ஒதுக்கீட்டை பீகாரில் இருந்து தொடங்குவோம்" என்றும் அவர் கூறினார்.
 

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!