Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : குற்றவாளி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (17:44 IST)
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ அதிரடி சோதனைபொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் மேற்கொண்டு வந்த நிலையில் சமீபத்தில்  இவ்வழக்கு மீதான விசாரணையை ர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இன்று  ஐந்து பேரில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசர் வீட்டில் சிபிஐ போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளதகத் தகவல்கள் வெளியாகின்றன. 
 
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டியது தொடர்பாக வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மணிவண்ணன் என்பவர் போலீஸாரிடம் சரணடைந்தார்.
 
அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப் பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்,.
 
மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன.
 
இதனையடுத்து இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான  5பேரை கைது செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
இதனையடுத்து  சமீபத்தில்,  கணொளி காட்சி மூலம் குற்றவாளிகள்  5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை. இதனையடுத்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்னன் ஆகியோரின் நீதிமன்ற காவலை கடந்த 6ஆம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
பின்னர்  இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் குற்றப்பிரிவு புலனாய்வு துறையிடமிருந்து சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
’’இதனைத் தொடர்ந்து இன்று பொள்ளாச்சியில் சம்பவத்த்தில்  கைதான முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில்  இன்று சிபிஐ கமிஷன் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ‘’இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்