Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்ணுடன் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய அரசியல் பிரமுகர் கைது!

பெண்ணுடன் ஹோட்டலில்  ரூம் எடுத்து தங்கிய அரசியல் பிரமுகர் கைது!
, திங்கள், 29 ஜூலை 2019 (19:42 IST)
சென்னை மண்ணயடியை சேர்ந்த  பிரபல  அரசியல் கட்சி பிரமுகர் நஜீம் .  திருச்சி ஜங்‌ஷன் ராயல் ரோடு பகுதியில் உள்ள லாட்ஜுக்கு ஒரு இளம் பெண்ணுடன் சென்ற இவர், கணவன், மனைவி இருவர் தங்குவதற்கு ஒருஅறை வாடகைக்கு வேண்டும் என்று அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நஜீம் மற்றும் அப்பெண்ணுக்கு அங்கு ஒரு அறை தரும்படி ஹோட்டல் மேனேஜர் ஊழியர்களுக்கு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து இவர்கள் இருவரது நடவடிக்கையும் ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் மேனேஜருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். மேனேஜர் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளார்.
 
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அறைக்குள் சென்று இருவரிடம் விசாரித்தனர். இதில் நஜீம் அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டார். இதையடுத்து போலீஸார் அப்பெண்ணை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் நஜீமிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுவுக்கு அடிமையான மகனை திருத்த பெற்றோர் எடுத்த முடிவு...