3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

Siva
செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (13:12 IST)
மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் அரசு சலுகை வழங்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கை குறித்து திமுக அரசு பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதற்கு தமிழகம் உள்பட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
தொகுதி மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில், மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள முன்வரும் பெற்றோருக்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என பர்கூர் தொகுதி எம்எல்ஏ மதியழகன் இன்று சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
 
இது சம்பந்தப்பட்ட கேள்விக்கு அமைச்சர் விரைவில் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments