Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதமி அளித்த நில மோசடி புகார்: கைதான பலராமனை காவலில் எடுத்த காவல்துறை..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (10:50 IST)
கௌதமி அளித்த நில மோசடி புகாரின் அடிப்படையில் பலராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை தற்போது ஒரு நாள் போலீஸ் காவலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
நடிகை கௌதமி பாஜகவில் இருந்து வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.  அவர்  தனது குடும்ப நண்பராக இருந்த அழகப்பன் என்பவர் தன்னுடைய சொத்துக்களை மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார். 
 
இந்த புகார் குறித்து தனக்கு பாஜக எந்தவித உதவியும் செய்யவில்லை என்பதால் அவர் கட்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கௌதமி அளித்த புகாரியின் அடிப்படையில் பலராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். 
 
அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து தலைமறைவாக உள்ள அழகப்பன் என்பவரையும்  கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பலராமனை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்களை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments