Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாடு முட்டி உயிரிழந்த முதியவர் நுரையீரல் தொற்றால் உயிரிழப்பு: போலீசார் தகவல்..!

மாடு முட்டி உயிரிழந்த முதியவர் நுரையீரல் தொற்றால் உயிரிழப்பு: போலீசார் தகவல்..!
, சனி, 28 அக்டோபர் 2023 (14:32 IST)
சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டி சிகிச்சையில் இருந்த முதியவர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழப்பு என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
சென்னை திருவல்லிக்கேணியிl மாடு முட்டியதால் காயங்களோடு சிகிச்சையில் இருந்த முதியவருக்கு உடல் தேறி வந்த நிலையில், நுரையீரல் தொற்று ஏற்பட்டது என்றும், நுரையீரல் தொற்று காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் இருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றும், இதுகுறித்து 174 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தகவல்  தெரிவித்துள்ளனர்.
 
 சென்னை சாலைகளில் திரியும் மாடுகளை முறைப்படுத்த பொதுமக்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தனர். குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணியில் மாடுகள் சாலைகளில் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலும் கூடிய செய்திகள் வெளியாகிது. 
 
அப்போதே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மாடுகளை அப்புறப்படுத்தியிருந்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்று திருவல்லிக்கேணி மக்கள் கூறுகின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

185 தொகுதிகளில், பூத் கமிட்டி.. விஜய் மக்கள் இயக்கம் தீவிரம்