Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய காவல்துறை ஆய்வாளர் - காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (14:47 IST)
திருநெல்வேலியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களுக்கு தண்டனையாக பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி போன்ற காவல்நிலையத்திற்கு உட்பட்ட சுமார் 10 மேற்பட்ட குற்றவாளி இளைஞர்களை பிடித்து கருங்கற்களால் அவர்களின் பற்களை உடைத்தும், பிடுங்கியுள்ளார் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங். 
 
இதையடுத்து அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது. பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
இதையடுத்து கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமை செய்த காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டங்கள் எழுப்பியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments