Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் பதுங்கியுள்ள ராஜேந்திர பாலாஜி..? – விரைந்தது தனிப்படை!

டெல்லியில் பதுங்கியுள்ள ராஜேந்திர பாலாஜி..? – விரைந்தது தனிப்படை!
, புதன், 29 டிசம்பர் 2021 (11:39 IST)
பண மோசடி வழக்கில் தேடப்படும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. அப்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் சாத்தூரை சேர்ந்த நபருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா, பெங்களூரில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி டெல்லியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா?