Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாஸுக்கு கட்டம் சரியில்ல - ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு

கருணாஸுக்கு கட்டம் சரியில்ல - ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு
, செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (07:19 IST)
கைதுசெய்யப்பட்ட கருணாஸை ஒரு வாரம் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசினார். தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.  அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும் தனது ஜாதிப் பெருமையை இஷ்டத்திற்கு அளந்து பேசினார். 
 
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு சென்ற, நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
 
இந்நிலையில் கருணாஸை ஒருவாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கருணாஸ் மீதான ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.90ஐ நெருங்கும் பெட்ரோல் விலை: முடிவே இல்லையா?