Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மாடியோவ்…இப்படியுமா திருடுவாங்க…நெஞ்சு பகீர்..

அம்மாடியோவ்…இப்படியுமா திருடுவாங்க…நெஞ்சு பகீர்..
, திங்கள், 24 செப்டம்பர் 2018 (16:24 IST)
அமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியில் உள்ள ஒரு நதியோரத்தில்  சவான்னா கிரேவிண்ட் (22) என்ற பெண்ணில் சடலம் கிடந்துள்ளது.


இது குறித்து போலீஸார் விசாரணை செய்த போதுதான் சவான்னா கிரேவிண்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த புரூக் என்ற பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து அவரைக் கொலைசெய்துள்ளனர் என்ற திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.

சவான்னா நிறைமாத கர்பிணியாக இருந்த போதுதான் கொலைசெய்யப்பட்டார். அப்போது அவரது வயிற்றில் வளர்ந்து வந்த குழந்தை என்ன ஆயிற்று என்பது புதிராகவே இருந்தது.
இந்நிலையில் தம்பதிகள் இருவரும் சவான்னாவின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த பெண்ணின் காதலர் வில்லியம் கூறுகையில், ’அன்றைய தினம் நான் வீட்டிற்குள் நுழைந்த போது, என் காதலி ரத்தக்கரையுடன் ஒரு குழந்தையைக் கொண்டு வந்து இனி இது நம்முடைய  குழந்தை என்றார். ஆனால் என் காதலி கொலை செய்தது பற்றி எனக்கு எதுவும்  தெரியாது’ என்று முதலில் போய் வாக்கு மூலம் பதிவுசெய்திருந்தார்.

பின் வில்லியமின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸார் அங்கே இருந்த ஒரு கயிற்றினை கண்டெடுத்து அதில் டி.என்.ஏ சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் முடிவில் வில்லியம் கர்ப்பிணி சவான்னாவின் கழுத்தை நெரித்து கொன்றது உறிதியானது. இதனையடுத்து அவர்களுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஸ் விலை உயர்வு : சிலிண்டரை திருமண பரிசாக கொடுத்த நண்பர்கள்